Romance என் காதலே –ரம்யா
#1
தொடர்கதை - என் காதலே – 01 - ரம்யா
[Image: myLove.jpg]
ன் பெயர் கயல்விழி.என் கைக்கோர்த்து என் வாழ்க்கையின் சில பக்கங்கள் பயணிக்க வாங்க.
அழகான அமைதியான கிராமம்....இருங்க அப்படி இல்ல என்கதை.சற்று இரைச்சலான ஆனால் எதிலும் ஒரு உயிரோட்டமுள்ள டவுன் தான் என் ஊர்.ஆற்றங்கரையில் சிவனும் விஷ்ணுவும் தனக்கென வீடுகட்டிக்கொண்டு ஒன்றாக வசிக்கும் ஊர்.பல இன மக்கள் ஒற்றுமையா அன்பா பழகும் சின்ன பாரதம் எங்க ஊர்.நடந்தே முழு ஊரையும்சுற்றி வரலாம்.அவ்வளவு அழகு.பெரிய வீதிகள்,பொட்டிகடைகள்,விளையாட்டு திடல்,சினிமா தியேட்டர்,துணிககடைகள்,டீ கடைகள் எல்லாமே அழகு.இன்னும் அழகு சேர்ப்பது கோபுரங்கள்.கோபுரம் உள்ளநுழைந்தாலே ஆளைத்தூக்கும் காற்று, கோபுரத்த தாங்கி புடிச்ச மாதிரி பொம்மைகள்.உட்புறமா சின்ன திண்ணைகள்,அதுல உட்கார்ந்து மழைஇரசிக்கிறது தனி சுகம்.சொட்ட சொட்ட நனைஞ்ச கோபுரத்த பார்க்கிறதுல தனி ஆனந்தம்.
எங்க ஊர் அழகா தெர்ய காரணம் அவை தந்த இனிக்கும் நினைவுகள்.அதுக்கு காரணமான என் குடும்பம். அப்பா!இந்த உலகத்துல எங்க இந்த வார்த்தை கேட்டாலும் என் கண்ணில் கருத்தில் தெரியும் ஒரே முகம் என் அப்பா இராமசந்திரன். அன்பான ஆசிரியர்.அவருக்கு ஏற்ற அம்மா ஜானகி.இவர்களோட அன்பான வாரிசுகளான அண்ணன் ரகு தம்பி கண்ணண் நடுவில் நான். என்னை சுற்றி அன்பு மயம்.அமைதியான குடும்பமோ ன்னு கற்பனை பண்ணாதீங்க.எப்பவும் ஓயாத சத்தம் தான் வீட்டில். அம்மா அப்பா சண்டையில்லாத வீடா.என்னன்னு தெரியாம சண்டை வரும்.உடனே சட்டைய மாட்டிக்கொண்டு வெளியே செல்லும் அப்பா அவர் திரும்பும் போது சூடான காபி தரும் அம்மா.அது தான் காதல்ன்னு அப்போ புரியல.
இவங்க சண்டைக்கு சலைச்சதில்லை எங்க ரகளை.ரகு ஒரு சுத்தக்காரன்.கண்ணண் சேட்டைக்காரன்.நடுவில் நான் பலிஆடு.ரகு என் ஆசான் மரியாதை அதிகம் அவனிடம்.மூத்தவன் என்ற பொறுப்பு மிக்கவன்.எல்லா நேரங்களிலும் எனக்கு பக்கபலமானவன்.பொடியன் என் குழந்தை ,தோழன்,சண்டைக்கான சரி ஜோடி.ரொம்ப சுவாரஸ்யமான எளிமையான வாழ்க்கை. கவலைகள் அண்டாத பருவம்.அப்பா உழைப்பில் மட்டும் இயங்கிய குடும்பம்.அதனால வரவு செலவு அறிஞ்ச வளர்ப்பு.அளவுக்கு அதிகமா பொருள் வாங்கவோ சேர்க்கவோ கூடாதுங்கற வைராக்கியம் இயல்பா அமைந்தது.சிறந்த சில விஷயங்கள் பார்த்து பார்த்து தான் பழக்கத்தில் வரும்.கற்றுக்கொடுக்கனங்கறது இல்லை. இயலாமை இல்லாதபோதும் ஆடம்பரம் மீது பற்று இல்லாமல் போச்சு.
தரையில் பாய் போட்டு ஒரே போர்வைக்குள்ள நானும் அம்மாவும். கீழே உட்கார்ந்து எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டு சிரித்து மகிழ்ந்த தருணங்கள்.பக்கத்துல விளைஞ்ச காய்கனிகள் அன்றாடம் வாங்கி வந்து சமையல்.அக்கம்பக்கம் வீட்டோடு இருந்த குடுக்கல்வாங்கல்.அன்யோன்யமான அன்பு நெஞ்சங்கள்.தண்ணீர் ஆரம்பித்து எல்லாமே சிக்கனமாக செலவு. அம்மா மனசரிஞ்ச அப்பா,அப்பா பாக்கெட் அறிஞ்ச அம்மா.எளிமை எளிமைன்னு எந்த குறையும் வச்சதில்லை.குழந்தை பருவம் என்னவெல்லாம் கேட்குமோ அது எல்லாம் கிடைத்தது. பொருளைவிட மனிதனை நேசிக்கும் வாழ்க்கை. உண்மையிலேயே எளிமையான வாழ்க்கை தான் நிம்மதியான வாழ்க்கை. கால ஓட்டத்தில் இதை தொலைத்துவிட்டு இன்றைக்கு மினிமலிஸம் ன்னு வெளிநாட்டாள் சொல்லும் பாடம் நாம் இப்போ வாய்மூடி தலையாட்டி கேட்டகிறோம்.கொடுமை.நம்ம முன்னவன் சொன்ன வழி நடந்தாலே பல அற்புதங்கள் புரியும்.அப்பா இன்று வரைக்கும் அப்படி தான் இருக்கார்.

 அப்பா மகள் உறவு ஒரு அற்புதம் தான் அதிசயம் தான்.தன்னோடபெண் உருவா மகளை பார்க்கிறார்.தன் அன்னையையும் பார்க்கிறார்.என் அப்பா இன்று வரை என் உற்ற தோழன் தான். குழந்தையா இருந்தபோது என் கூட தவழ்ந்தார்.என் கூட கூட்டாஞ்சோறு சாப்பட்டார்.வளர்ந்த பின் எனக்கு நிறைய புத்தகங்கள் அறிமுகப்படுத்தினார்.பருவம் வந்த போது மற்றவர் முன்னிலையில் எப்படி கௌரவமாக தெரிய வேண்டுமென தெளிவு படுத்தினார்.பல சமயங்களில் தாயுமானார்.ரகு கண்ணண் விட அதிக அன்பு என்னிடம் தான். அவர் அதை மறுத்தாலும் உண்மை அதுவே.ரகுவிற்கு பாடம் சொல்லிததரும் போதும் சரி கண்ணணுடன் விளையாடும்போதும் சரி வயதிற்கு ஏற்றாற்போல் மாறிப்போவார்.அப்பா தான் என் ஹீரோ.

அம்மா எல்லா அம்மா போல கண்டிப்ப பேர்வழி தான். ஆனால்அன்பு சுரக்கும் அமுதசுரபி.நல்லா பாடுவா.சாஸ்திரியம் படிச்சிருக்கா.ஆனா அதை கொண்டு சம்பாதிக்க நினைச்சதில்லை.எங்க குடும்பம் தான் அவ உலகம்.மன அமைதிக்காகவும் தன் உற்சாகத்துக்காகவும் பாடுவா.வாய் மட்டுமல்ல அவ கையும் பாடும்.சமையல் ராணி.ஆனால் கற்றது கையளவங்கற அடக்கம்.ஆசிரியர் ஆகனும்னு ஆசை அவளுக்கு ஆனால் குடும்ப பொறுப்புகள் சுமக்க ஆரம்பிச்சதும் அதுவே தன் முதல்கடமைன்னு முடிவு பண்ணிட்டா.அதுக்காக என்றைக்குமே புலம்பினதோ கிடையாது.வாழ்க்கை போற திசையில் தன்னை செலுக்கிட்டா.ஒவ்வொரு நாளும் திருவிழா என்பது தான் அவ தாரகமந்திரம்.ஆனால் எங்கள பற்றின கவலை படும்போது சராசரி அம்மா.
பாட்டு அவ தந்த வரம் எனக்கு.நான் ஆசிரியர் ஆகனும்னு தான் அம்மா அப்பா ஆசை ஆனால் என் மேல அந்த எண்ணங்கள் திணிச்சது இல்லை.தன் பிள்ளைகள் மீது கதன் கனவுகளை திணிக்காத பெற்றோர் கிடைப்பது வரம் தானே.ரகு கண்ணண் இருவரையும் வெளியூர் அனுப்பி படிக்க வைத்தார் அப்பா நான் மட்டும் கூட்டுக்குறுவியா அம்மா அப்பா அரவணைப்பில பக்கத்து ஊர் கல்லூரியில் படிச்சேன.சாதாரண ஆசிரியர் சம்பளத்தில எங்க மூன்று பேரையும் எப்படி படிக்க வைத்தார் என்பது இன்று வரை புதிர் தான். அண்ணன் தம்பி விட உலக அறவு எனக்கு குறைச்சல் தான். அதனாவலேயே வேலை தேடி சென்னை அனுப்ப்பட்டேன். ரகு தான் முக்கிய காரணம். அவன் எனக்கு இனனொறு தந்தை. பெண்கள் சமூக அறிவோட தன் சொந்த கால்களை நம்பி இருக்கனுங்கறது தான் அவன் எண்ணம்.என்னுடைய மிகப்பெரிய உந்துதல் அவன் தான். குடும்பம தாண்டி என் நட்பு வட்டம்.சிறிய வட்டம் தான் ஆனாலும் உண்மையான நட்புகள்.அதிலும் யாதவ் என் உயிர் தோழன்.இந்ந அழகிய உலகம் தவிர வேறேதும் அறியாத நான் இப்போது சிங்கார சென்னையில்.விடுதியில். சென்னை எனக்கு நிறைய புது அனுபவங்கள் தந்தது.சில இனிப்பு சில கசப்பு.எல்லா அனுபவங்களுமே பாடங்கள் தானே.சென்னை தந்த இனிமையான பரிசு காதல்.என்னை மாற்றி என் உலகை மாற்றிய காதல்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
தொடர்கதை - என் காதலே – 02 - ரம்யா
[Image: myLove.jpg]
சிங்கார சென்னை.கூட்டுக்கிளியாய் வளரந்த நான்உலகின் வேறு பரிமாணங்களையும் அறிய பெறும் உறுதுணையாக இருந்தது.பள்ளியிலும் கல்லாரியிலும் என் நட்பு வட்டம் மிக சிறிது ஆனாலும் இனிமையானது.அந்த வட்டம் பெரிதானது சென்னையில் தான். பல முகம் பல நிறம் கொண்ட மனிதர்கள்.எல்லொரிடமும் நட்ப வேண்டும், அதே சமயம் எல்லைக்கோடும் வேண்டும். எல்லொரையும் நம்ப வேண்டும் சமயத்தில் சமயோஜிதமாய் நம்பாமல் இருக்க வேண்டும். இது தான் நிஜ உலகம் .புரிந்தது.இந்த நிஜம் என்னை கொஞ்சம் புரட்டிப்போட்டது.எதிலும் உடன் நிற்கும் என் அப்பா இப்போதும் உடனிருந்தார்.குடும்பத்துடன் சென்னை இடம்பெயர்ந்தார்.எனக்காக அவர் செய்தது பிறர் கண்களுக்கு சாதாரண விஷயமாய் இருக்கலாம் ஆனால் பிறந்து வளர்ந்த ஊரை பிரிந்து எங்கோ வாழ்பவர்களுக்கு இதன் ஆழம் புரியும்.நெகிழ்ந்து போனேன்.இப்போது நான் ஒரு மகாராணியாகவே உணர்ந்தேன்.பெரும் உற்சாகத்துடன் என் வாழ்க்கை நகர்ந்தது. இந்த உற்சாகம் இரடிப்பானது அவன் வருகையால் தான். மற்றவர் கண்ணுககும கருத்திற்கும உறுத்த கூடாதென நினைக்கும் நான் வெகு நேரம் என்னை அலங்கரித்து அழகு பார்த்துக்கொண்டேன் அவனால்.உள்ளுக்குள்ளேயும் ஒரு அழகான அவஸ்தை தந்தது அவன் மீதான காதல்.இது வரை என் உற்ற தோழனான ன் அப்பாவிடமே வெட்கப்பட வைத்து ஒளித்து வைத்து இன்பம் காண செய்தது இந்த காதல்......சரிங்க...புரியுது...அவனைப்பற்றி சொல்லறேன்.
அவன் என் வாழ்க்கையின் பௌர்ணமி. என்னையே புரட்டிப்போட்ட சூறாவளி. இந்த உலகை வேறுவிதமா காட்டிய கண்ணாடி.சில காயங்கள் கூட ஏற்படுத்தின கத்தி.எங்க சந்திப்ப கொஞ்சம் வித்தியாசமானது.எலலோருக்கும் பள்ளி கல்லூரியில ஆரம்பிக்கும் எங்களுக்கு அந்த பருவம் தாண்டி ஏற்பட்டது. ஒரே பணியிடமா?னு கேட்கரீங்களா இல்லை. எங்க சந்திப்ப சொல்றேன்.கல்லூரி முடித்து சென்னையில் வேலை சேர்ந்த அப்புறம் ஒரு நாள் அவனை பார்த்தேன்.அவன் முகம் எங்கேயோ என் மனதில் இருந்திருக்கு அதனால் பார்த்ததும் அடையாளம் தெர்ந்தது.ஓடும் இரயிலில் இரண்டடி தூரத்தில் அவன் என்னையே பார்த்துக்கொண்டிருக்க.அது தெர்ந்தும் நானும் அவனையே பார்த்து கொண்டிருந்தேன்.அங்க நாங்கள் இருவரும் பறிமாறிக்கொண்ட புன்னகை இன்னமும் பசுமைய் நினைவிருக்கு.
ஒற்றை புன்னகையில் இதயம் கடத்த முடியும் ங்கறது பொதுவா பெண்களுக்கு சொல்லுவாங்க.அது ஆண்களுக்கும் பொருந்தும்ங்கறது அன்று புர்ந்தது.நல்லா பழகி பரிச்சயமாகி பிரிந்த இருவர் சந்திக்கும்போது வரும் புன்னகை எங்கோ எப்போதோ பார்த்து சில வார்த்தைகள் பறிமாறி சில நிமிடங்கள் பழகின எங்களுக்குள் வந்தது தான் அதிசயம்.அவன் யார் எங்கோ பாரத்த முகம்.மனம் புத்தி எல்லாம் என் மூளைக்குள் தேடிக்கொண்டிருக்க அவன் நெருங்கி வந்து,

"நீங்க கயல தானே...கயல்விழி!"

"ஆமா!!!நீ.....ங்....க"

"கண்டுபுடிங்க"உயிர் தீண்டும் புன்னகை இப்போது மிக அருகில்.

"பார்த்த ஞாபகம் இருக்கு ஆனா...."

"அத விடுங்க அப்புறம் ஞாபகம் பண்ணிக்கலாம்...எப்போ சென்னை வந்தீங்க....இங்க தான் இருக்கீங்களா?"

சகஜமாக அவன் பேச ஆரம்பித்தான்.என் மூளை வேலை நிறுத்தம் செய்து அவன் பேச்சில் லயித்தது.மனம் அவன் சிந்தும் ஒவ்வொரு புன்னகையிலும் சிறிதுசிறிதாய் பின்பு மொத்தமுமாய் அவன் வசம் போனது.ஒரு மணி நேர இரயில் பயணம் எப்படி முடிந்தது தெரியவில்லை.அவன் புன்னகை பூத்தமுகம் மட்டும் மனதில் நின்றது.இறங்குமிடம் வந்ததும் கைகுலுக்கி விடை பெற்றோம் மறுமுறை சந்திக்க விரும்பும் ஆசையோடும் நம்பிக்கையோடும்.வீடு போகும் வழியில் வழ்கமான இளையராஜா ஆனால் பாடல் வரிகளில் எல்லாம் அவன் முகம் அவன் புனனகை.காற்றில் மிதந்தேன்.என்னுள் சிர்த்தேன்.வெட்கமும் கொண்டேன்.இந்த உண்ர்வுக்கு என்ன பெயர்?விளங்கவில்லை ஆனால் இன்பமாக இருந்தது.வீட்டினுள்ளும் அவன்.உணவு செல்லவில்லை.இது என்ன புது உணர்வு. திரும்ப திரும்ப அவன் முகம் அவன் குரல்.

என் ஏகாந்த சாம்ராஜ்யம் என் வீட்டு மொட்டை மாடி..அங்கு சென்று என் மூளையை திருகினேன்.அவன் முகம் அவன் புன்னகை தாண்டி அவன் பெயர் தேடினேன்.சட்டென்று மூளை சொன்னது'அறிவழகன்'.அவன் என் பெயர் மறக்காமலிருக்கநான் எப்படி மறந்தேன.என்னையே திட்டிககொண்டேன்.திருமப திரும்ப அவன பெயர் சொல்லிப்பார்த்தேன்.'அறிவழகன் அறிவழகன அறிவழகன்' ஒவ்வொரு முறையும் ஒவ்வொறு ஸ்ருதியில்.ஏனோ என்னுள் சிலிர்ப்பு.வெட்கம் ஏனோ எட்டிப்பார்த்தது.கல்லூரியில் சில நாட்கள் பழகிய முகம்.இருங்க இது கல்லூரி காதல் இல்லை.ஆனால் அன்று விதைககப்பட்டிருக்கலாம்.

என் எண்ணவோட்டம் கலைத்தது அவன் அழைப்பு. அலைபேசியில் புது எண்.ஏனோ அவனாய் தானிருக்கும் என்ற எண்ணம். மறுமுனையில்
"கயல்...நான் தான் உங்க இரயில் சினேகிதன்"

"யாரு?தெரியலையே..."பொய் தான் சொன்னேன்.

"சரியா போச்சு இன்னும் ஞாபகம் வரலையா?அது சரி உங்களையும் உங்க குரலையும் அறியாதவங்க இருக்க முடியாது.நான் அப்படியா"
Like Reply
#3
"என்ன சொல்ரீங்க தப்பான ஆள்கிட்ட பேசறீங்கன்னு நினைக்கிறேன்"

"கயல் கொஞ்ச நேரம் முன்னாடி தான் சந்திச்சோம்.நீங்க கயல் தானே."
அவனை சீண்ட விரும்பாதவளாய்"ஆங் நீங்களா...என்ன திடீர்னு கால்"

"அப்பாடா....தப்பிச்சேன்.நம்பர் கொடுத்தீங்க சரியா வாங்கினேனான்னு தெரிஞ்சிக்க தான்"ஆள் திண்ணும் புன்னகை.

" "

"ஒன்றும் பேச மாட்டீங்களா. நாம எங்க சந்திச்சிருக்கோம்னு தெரிஞ்சதா?"

"இன்னைக்கு இரயிலில்"

"அதில்லை அதுக்கும் முன்னாடி"

அது மறக்குமா அவனை சந்தித்து முதல் என் மனதின் ஆழத்திலிருந்து தோண்டி எடுத்த நினைவு.யோசனையில் பதில் அளிக்கமறந்தேன்.

"என்னமா பாடறீங்க கயல் அருமை"
"பாட்டா?நான் ஒன்னும் பாடலையே"

"உங்க மௌனம் கூட சங்கீதம் தான் கயல்"

ஏனோ அவன் அழைக்கும் 'கயல்'பிடித்தது.சிரித்தேன்.மறுமுனையிலும் புன்னகை.
"என்ன சிரிக்கறீங்க.என்னை மறந்துட்டீங்களா?"

"இல்லை அறிவழகன் ஞாபகம் இருக்கு.நம் கல்லாரி விழா கமிட்டி ல சந்திச்சிருக்கோம்"

அப்பாடா...மூச்சு வந்தது எனக்கு"

"கல்லாரி நாட்கள் எல்லாம் பசுமையான இனிமையான நாட்கற் இல்லையா அறிவழகன்"

ஆமா"இரவரும் சில நொடி அந்த இனிமையில திளைத்தோம்.

"ம்ம் வேறென்ன விஷயம்"

"ஒன்றுமில்லை குட்நைட் கயல்"

"குட்நைட் அறிவழகன்"

ஏனோ மறுமுனையில் அவன் குரல் நின்றதும் இதயம் படபடத்தது.

"ஹலோ"

"சொல்லுங்க கயல் லைன்ல இருக்கேன்"

"கால் கட் பண்ண சத்தம் கேட்கலை..அதான்"அசடு வழிந்தேன்

"உங்கள கட் பண்ணமுடியலை கயல்.ஏதாவது பேசுங்க"

"என்ன பேச ..தெரியலைங்க"

"முதல்ல வாங்க போங்க நிறுத்துங்க"

"நீங்க?!"

"சரி கயல் நான் நிறுத்திட்டேன்.நீயும் நிறுத்து"

"அதெப்படி சட்டுனு உங்கள வா போன்னு சிரமம் அறிவழகன்.கொஞ்சம் டைம் கொடுங்க"

"டைம் எவ்வளவு வேணாலும் எடுத்துகோங்க.அப்போ நம்ம சந்திப்புகள் ஒன்னா செலவழிக்கப்போற தருணங்கள் நிறைய இருக்குங்கறீங்க"

அவன் கேட்பது புரிந்தவளாய்

"கண்டிப்பா அறிவழகன்"

"ரொம்ப நன்றி கயல்"
தொடர்நது அரைமணி நேரமாய் ஏதேதோ பேசினோம்.சிரிததோம்.மகிழ்ந்தோம்.மனம் நிறைந்து போனது.அலைபேசி அனைத்த பின்னும்அவன் குரலும் சிரிப்பும்என் மனதில்எதிரொலித்துக்கொண்டிருந்தது.அறிவழகன்!யாரிவன்.அவன்மீது எனக்கென்ன இத்தனை ஈர்ப்பு. அவன் குரலில் ஏனிந்து மயக்கம். அவன் முகம் பார்க்க ஏன் இந்த தவிப்பு.அறிவழகன் அவர் பெயர் உச்சரித்துக்கொண்டே மகிழ்ந்தது உள்ளம்
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)